Powered By Blogger

Tuesday, February 26, 2013


மயான கொள்ளை
வீரகனூர் ஸ்ரீ பருவதராஜகுல ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத சிவராத்திரியை அடுத்து வரும் அம்மாவாசை அன்றுமயான கொள்ளைஎன்ற வைபவம் நடத்தப்படுகிறது. அன்றைய தினம் காலையில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் விஸ்வரூபத்தில் மயானத்திற்கு சென்று பிரம்ம கபாலத்தினை சம்ஹாரம் செய்து ,இறைவனுக்கு ஏற்ப்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விமோசனம் கிடைக்கச் செய்கிறாள்.
இந்த நாளில் பக்தர்கள் தங்கள் பிராத்தனைகளை செலுத்துவதற்காக சுண்டல், கொழுக்கட்டை, காய்-கனிகள், கிழங்கு வகைகள் அம்மனுக்கு படைத்து சூறைவிட்டு இந்த மயான கொள்ளை உற்சவத்தினை கொண்டாடுகிறார்கள்.

No comments:

Post a Comment

Pages