Powered By Blogger

Friday, January 24, 2014


குத்து விளக்கு



இந்து தர்மத்தில் கூறப்பட்டது போல் குத்து விளக்கை சரியான திசையில் ஏற்றுவதால் அதிகமான பலன்கள் கிடைக்கும்.
கிழக்கு முகமாக ஏற்றி, வழிபடுவதனால் துன்பங்கள் நீங்கும் மேற்கு முகமாக ஏற்றினால் கிரகதோஷம் பங்காளி பகை உண்டாகும்.
வடக்கு முகமாக ஏற்றினால் கல்வி மற்றும் திருமணங்கள் போன்ற சுபகாரியங்களில் ஏற்படும் தடைகள் நீங்கிடும். செல்வம் அதிகரிக்கும்.
தெற்கு முகமாக ஏற்றினால்  கெடுதி,குடும்பத்தில் குழப்பம்,அபசகுணம், பெரும்பாவம் உண்டாகும்.
விளக்கின் மகிமை
கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
நாள் தோறும் இல்லத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் புண்ணிய பலன் கிடைக்கும்.
விளக்கேற்றும் முகத்தின் பலன்                                                                             குத்துவிளக்கில் ஒருமுகம் ஏற்றினால்    -       மத்திமபலன்
குத்துவிளக்கில் இருமுகம் ஏற்றினால்    -       குடும்ப ஒற்றுமை
குத்துவிளக்கில் மும்முகம் ஏற்றினால்    -       புத்தி சுகம், கல்வி, கேள்விகளில் விருத்தி
குத்துவிளக்கில் நான்குமுகம் ஏற்றினால் -      பசு, பால், பூமி, சேர்க்கை
குத்துவிளக்கில் ஐந்து முகம் ஏற்றினால்   -     பீடை நிவர்த்தி, ஐஸ்வர்ய லக்ஷ்மி கடாட்சம் ஆகியவை பெருகும்.
மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது.
குத்து விளக்கை தானாக அணையவிடக்கூடாது. ஊதியும் அணைக்கக் கூடாது. மலர்களால் அணைக்க வேண்டும்.
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஐந்து முகம் கொண்ட குத்துவிளக்கை ஏற்றி திருமகளை வழிபட வேண்டும்.
தெரிந்து கொண்டால் மாத்திரம் போதாது கடைப்பிடியுங்கள் அப்பொழுதுதான் பலன் கிடைக்கும்.

No comments:

Post a Comment

Pages